Wednesday, November 5, 2008

வெளிநாட்டு கலாச்சாரம்

நான் இங்கே எழுத முற்படுவது வெளிநாட்டு கலாச்சாரத்தை பற்றி.... நான் வெளிநாட்டில் தற்காலிகமாக குடி இருப்பதனால் இங்குள்ள கலாச்சாரத்திற்கு கொடி பிடிப்பவன் என்று நினைக்க வேண்டாம்... நமக்கு தெரிந்தது எல்லாம் இவர்கள் இரவில் மேடையில் நடனமாடுபவர்கள்... பல பெண்களை மணந்து கொள்பவர்கள்... குடிப்பது... இவைதான்

நாம் நம்முடைய கலாச்சாரம் என்ற பெயரில் பல அடிமை தனத்தை கொண்டுள்ளோம்... நம்முடைய கலாச்சாரத்தை மொத்தமா குறை சொல்லவில்லை ஆனால் நாம் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும்... கல் ஆனாலும் கணவன் என்ற பேரில் பலர் செய்யும் அநியாயங்களை சகித்து வாழும் பெண்கள் பலர்... ஏன் என்றால் கல்யாணம் செய்து கொடுத்த பெண் வீட்டிற்கு வந்தால் பெற்றோருக்கு அவமானமாம்... அதற்காக தன்னுடைய பெண்ணிற்கு நடக்கும் கொடுமைகளை சகித்து கொண்டு வாழும் பெற்றோர் பலர்... ஆனால் இந்த கொடுமைகள் இங்கே குறைவு... தனக்கு பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து வாங்கி வேறொருவருடன் வாழும் சுதந்திரம் இங்குள்ளது... இதை யாரும் தவறாக பார்ப்பதில்லை... ஆனால் நாம் நமக்கு தெரிந்தவர்களுக்கோ இல்லை நமது உறவினர்களுக்கோ இது நடக்கும் வரை நாம் இதை உணருவது இல்லை... அதனால் தங்கள் வாழ்நாள் வரை பெண்களை கொடுமை படுத்தி வாழும் அரக்கர்கள் (psychos) நாம்தான் ஆதரித்து வருகிறோம்... இந்த விசயத்தில் வெள்ளைக்காரன் நம்மை விட உயர்ந்தவர்களாக தெரியவில்லை ?

குப்பைகளை தெருவில் போடுவது... இது நாம் கலாச்சாரம் அல்ல நம் பழக்கம்... ஒருவர் அவர் வைத்திருக்கும் குப்பையை தெருவில் போடுவது வேண்டுமானால் இங்குள்ள சட்டத்திற்கு கட்டு பட்டோ இல்லை அபராதத்திற்கு கடுப்பட்டோ இருக்கலாம்... வேறொருவன் குப்பையை தெருவில் போட்டால் கூட அதை எடுத்து குப்பை தொட்டியில் போடுவது என்பது சிறந்த பழக்கம் அன்றி வேறன்ன சொல்லுவது...
தொடரும் ...

2 comments:

Unknown said...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html
பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html

Unknown said...

Good one da!!